- பஞ்சாயத்து கவுன்சில் அலுவலகம்
- திருப்புவனம் யூனியன்
- Tiruppuvanam
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- துதாய் பஞ்சாயத்
- பஞ்சாயத்து
- தின மலர்
திருப்புவனம்,பிப்.18: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பல்வேறு துறைகள் சார்பில் ரூ.1264.54 கோடி மதிப்பிலான திட்டங்களை காணொலி காட்சி மூலம் துவக்கி வைரத்தார். பல்வேறு மாவட்டங்களில் இந்த திட்டங்கள் துவங்கப்பட்டன. திருப்புவனம் ஒன்றியத்தில் தூதை ஊராட்சிக்கு ரூ.23 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி அலுவலக கட்டிடத்தை முதல்வர் காணொலி மூலம் துவக்கி வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சின்னையா, ஆணையர் அருள் பிரகாசம், தூதை ஒன்றிய கவுன்சிலர் பூமாதேவி சின்னையா, ஊராட்சி தலைவர் கருப்பாயி ஆகியோர் அலுவலகத்தில் குத்து விளக்கு ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். ஊராட்சி செயலர் முத்துராஜா நன்றி கூறினார். அதனைத்தொடர்ந்து ஒன்றியத்தில் மார்நாடு, ஆனக்குளம், பத்துப்பட்டி, மடப்புரம் வடகரை உட்பட எட்டு கிராமங்களில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஒன்றிய குழுத்தலைவர் சின்னையா, ஆணையாளர் அருள்பிரகாசம் பங்கேற்றனர்.
The post திருப்புவனம் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.